Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு கல்லூரித் தலைவர் கே.நல்லுசாமி தலைமை தாங்கினார். செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன் மற்றும் இயக்குநர் - உயர்கல்வி அரசுபரமேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டன.
மேலும், நாமக்கல்லில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர்
கோவில்களின் அறங்காவலரும், கல்லூரியின் தலைவருமான கே.நல்லுசாமி அவர்களுக்கு இத்திருக்கோவில்களின் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடந்தமைக்காக பாராட்டுகளும்,
வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் உட்பட துறைத் தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.